Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, December 29, 2011

அமைதி......


ஒரு குட்டிக்கதையும் அமைதியின் அர்த்தமும்.

அரசன் ஒருவன் ஒரு தனது நாட்டிலுள்ள ஓவியர்களுக்கெல்லாம் ஒரு போட்டிஅறிவித்தான், அமைதி என்று தலைப்பிட்டு அதற்க்கு ஏற்றவாறு யார் ஓவியம்வரைகிரார்களோ அவர்களுக்கு பரிசு என்று.

பல ஓவியர்கள் போட்டியில் பங்கு பற்றினர். அரசனும் ஒவ்வொரு ஓவியமாகபார்த்துக்கொண்டு வந்தான் , இறுதியில் அவனுக்கு இரண்டு ஓவியங்களைபிடித்திருந்தது. ஆனால் ஒன்றைத்தான் தெரிவு செய்ய வேண்டும் ஆகவேதிரும்பவும் அவ்வோவியங்களை பார்த்தான்.

முதலாவது ஓவியம் - இதிலே ஒரு சலனமற்ற குளம், சுற்றிவர எந்தவிதஆர்ப்பாட்டமுமில்லாத மலைத்தொடர், மரங்கள் , மேலே நீல வானம் அதிலேஇடையிடையே வெண்முகில்கள். பார்த்தவுடனே அனைவரையும் கவரும்விதத்தில் இருந்தது அவ்வோவியம்.

இரண்டாவதோ - இதிலும் மலை; ஆனால் அத்தனை அழகான மலை இல்லை , வானமும் மிகவும் கோவத்துடன் இருந்தது கருமுகில் சூழ்ந்து மலைபெய்துகொண்டிருந்தது, மலையிலிருந்து ஒரு நீர்வீழ்ச்சி. மொத்தத்தில் இத்தனைபார்க்கும் போதே காதில் இரைச்சல் கேக்கும் போல் இருந்தது . ஆனால்அப்போதுதான் அரசன் அவ்வோவியத்தை கூர்ந்து பார்த்தான். அதிலே அந்தநீர்வீழ்ச்சிக்கு அருகிலே ஒரு சிறிய மரம் இருந்தது அதிலே ஒரு குருவியின் கூடுஇருந்தது, கூட்டிலே ஒரு தாய்க்குருவி எந்தவித சலனமுமில்லாமல்அமைதியாக இருந்தது. 

அரசனும் அந்த ஓவியத்திற்கே பரிசினை வழங்கிவிட்டு இவ்வாறு கூறினான்

"அமைதி என்பது சத்தமும் ஆர்ப்பாட்டமும் கஷ்டங்களும் இல்லாத இடத்தில்இல்லை, இவ்வளவும் நிறைந்த அந்த இடத்திலே எந்தவித பயமோ சலனமோஇன்றி இருக்கும் இதயத்தில்தான் இருக்கிறது"

No comments:

Post a Comment