Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, February 29, 2012

Facebook உபயோகத்தில் இந்தியா இரண்டாவது இடம்...


சமூக தளங்களில் facebook-ம் ஒன்று. தற்போது வரை 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது facebook. இந்தியர்களிடையே facebook தளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் facebook உபயோகத்தில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளது இந்தியா.
Forbes தளத்தின் தகவல் படி 6வது இடத்தில் இருந்து ஒரே வருடத்தில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா.
 பிப்ரவரி 2012 கணக்கெடுப்பின்படி இந்தோனேசிய பயனர்களின் எண்ணிக்கை 43,060,360 இந்தியா பயனர்களின் எண்ணிக்கை 43,497,980 பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தான் UKவிடம் இருந்து இரண்டாவது இடத்தை தட்டி பறித்தது இந்தோனேசியா. ஆனால் மூன்றே மாதத்தில் இழந்தது.
தற்போதைய நிலவரப்படி facebook உபயோகத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும் உள்ளன.  இந்தியாவில் இணையம் பயன்படுத்துவது வேகமாக வளர்ந்து வருகின்றது. இதனால் facebook பயணர்களும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.  விரைவில் இந்தியா முதல் இடத்தை

கணினியின் மெமரியை அதிகரிக்க இலவச மென்பொருள்...


கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் RAM முக்கிய பங்கு வகிக்கிறது.  கணினியில் ஒரே நேரத்தில் நாம் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு  பக்கம் நம்முடைய வலைப்பதிவை பார்த்துக் கொண்டிருப்போம். அவ்வாறு செய்து கொண்டு இருக்கும் போது கணினியின் memory அதிகமாக உபயோகப்படுத்தப்படும். அதனால் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இதனை எவ்வாறு சரி செய்வது என்று இப்போது பார்ப்போம்.
http://www.box.com/shared/05v35tvo0q இந்த link-ல் சென்று மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதனை கணினியில் install செய்து விட்டால் போதும் கணினியில் நீங்கள் எத்தனை programme ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் memory-யை கட்டுப்படுத்தி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.
Download செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup file வந்திருக்கும். அதை இரண்டு முறை click செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும்
மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து  வகையான பிரிவுகள்  நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.
Information Overview : 
 இந்த button click செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதைப் போல window வரும்.
இந்தப் பிரிவில் கணினி இப்பொழுது எவ்வளவு memory உபயோகப்படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த window-வில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு memory காலியாக உள்ளது என்று அர்த்தம்.
Memory Optimization 
இந்தப் பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
  • இந்த window-வில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் memory-ஐ கட்டுப்படுத்த உதவும் வசதிகளாகும்.
  • இதில் உள்ள Fast Free என்பதை click செய்தால் கீழே இருப்பதைப் போல ஒரு message window வரும்.
  • அதில் கணினி இதற்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரியை கட்டுப்படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.
  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி கணினியின் மெமரியை கட்டுபடுத்தும்.
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்துவிடுங்கள்.
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும் கணினியில் எந்த file-கள் எவ்வளவு மெமரியை உபயோகித்துக் கொள்கிறது போன்ற தகவல்கள் கொண்டிருக்கும்.

புகைப்படங்களை ஐகான்களாக மாற்ற............

பல்வேறு போர்மட்டுகளில்(PNG, JPG, GIF, BMP) உள்ள புகைப்படங்களை ICO என்ற ஐகான் போர்மட்டுகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது.
கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று தளத்தை ஓபன் செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse என்பதை கிளிக் செய்து உங்கள் கணணியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.
பின் Convert Now என்பதை கிளிக் செய்தால் உங்களது புகைப்படம் ஐகானாக மாற்றப்பட்டு விடும்.
இந்த தளம் விண்டோஸ் 7 இற்கு ஏற்ற ஐகான்களாக மாற்றவும், ஏற்கனவே ஐகான்களாக இருப்பவற்றை புகைப்படங்களாக மாற்றிவிடவும் உதவி புரிகிறது.

புரோகிராமிங் கற்க்க.............

எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது.
வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.
இவை தவிர புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே புரோகிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.
இதன் பெயர் கோட் அகடமி(Code Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங்(coding)எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.
நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும் பாடம், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகநம்மை புரோகிராமிங் என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது.
இது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன.
புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல்பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் புரோகிராமிங் கற்றுக் கொள்ளலாம்.

Sunday, February 26, 2012

இலவச PDF கன்வெர்டர் மென்பொருள்....

PDF கோப்புகளை யாராலும் எடிட் செய்ய முடியாது என்பதால் பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் PDF வடிவில் கிடைக்கின்றன.
இத்தகைய PDF கோப்புகளை நமக்கு வேண்டிய போர்மட்டில் மாற்றி கொள்ள இணையத்தில் ஏராளமான இலவச PDF கன்வெர்டர் மென்பொருட்கள் உள்ளன.
PDFZilla மென்பொருள் மிகச்சிறந்த கன்வெர்டர் மென்பொருளாகும். இந்த மென்பொருளை தற்போது முற்றிலும் இலவச சீரியல் கீயுடன் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
PDFZilla மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
இந்த மென்பொருள் மூலம் PDF கோப்புகளை DOC, TXT, BMP, JPG, GIF, TIF, HTML, SWF போன்ற வகைகளுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.
உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமான மென்பொருள் வெறும் மூன்று கிளிக்கில் PDF கோப்புகளை DOC கோப்புகளாக மாற்றிவிடலாம்.
சுமார் 20 மொழிகளை சப்போர்ட் செய்கிறது மற்றும் அனைத்து Unicode மொழிகளுக்கும் சப்போர்ட் செய்கிறது.
Batch mode ல் ஒரே நேரத்தில் சுமார் 1 கோடி கோப்புகளை PDF இருந்து Doc கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும்.
PDFZilla மென்பொருளை இலவசமாக பெற:
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
அதில் Register என்ற லிங்கை அழுத்தி Giveaway தளத்தில் உள்ள சீரியல் கோடினை கொப்பி செய்து Register விண்டோவில் பேஸ்ட் செய்யவும்.
இதன் பிறகு OK பட்டனை அழுத்தி விட்டால் போதும் இந்த மென்பொருளை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம்.

Saturday, February 25, 2012

தானியங்கி மின்னஞ்சல் அனுப்ப......



சில நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டி இருக்கும். இதற்கு வசதியாக ஜிமெயிலில் மின்னஞ்சல்களை Schedule செய்து வைத்து அனுப்பலாம்.
ஜிமெயிலில் Schedule வசதியை கொண்டு வர:
முதலில் இந்த Right Inbox தளத்திற்கு செல்லுங்கள், உங்களுடைய இணைய உலாவி(Firefox3.6+ Chrome 5.0+) புது பதிப்பாக இருப்பது நல்லது.
Right Inbox தளத்தில் உள்ள Install Now என்ற பட்டனை அழுத்தி இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஜிமெயிலை ஓபன் செய்யுங்கள். ஏற்க்கனவே ஓபன் செய்து இருந்தால் Refresh செய்யவும்.
அடுத்து கீழே உள்ள படங்களில் உள்ளது போல் தொடருங்கள்.
அவ்வளவு தான் உங்களுடைய ஜிமெயிலில் இந்த Schedule வசதி ஆக்டிவேட் ஆகி விடும்.
Schedule வசதியை உபயோகிப்பது எப்படி:
எப்பொழுதும் மின்னஞ்சல் அனுப்பவது போல Compose பட்டனை அழுத்தி உங்கள் செய்தி, மற்றும் அனுப்புனர் விவரங்களை கொடுத்த பின்னர் Send பட்டனுக்கு பக்கத்தில் Send Later என்ற புதிய பட்டன இருப்பதை காண்பீர்கள் அதனை கிளிக் செய்யவும். 
அதில் உங்கள் மின்னஞ்சலை அனுப்ப குறிப்பிட்ட சில நேரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து கொள்ளுங்கள் அல்லது உங்களுக்கு தேவையான நேரம் அந்த பட்டியலில் இல்லை என்றால் கடைசியில் உள்ள at a Specific Time என்பதை கிளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் செல்ல வேண்டிய நேரம் மற்றும் திகதியை தெரிவு செய்து கொள்ளவும்.
சரியாக நேரம் set செய்தவுடன் கீழே உள்ள Schedule பட்டனை கிளிக் செய்து விட்டால் போதும் குறிப்பிட்ட நேரத்திற்கு உங்களுடையை மின்னஞ்சல் அவர்களுக்கு சென்று விடும்.

Thursday, February 23, 2012

ஆபத்து விளைவிக்கும் மொபைல் உபயோகம்........


நம்மில் பலர் நடக்கும் போது Mobile Phone பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும் SMS அனுப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது.
20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் இவர்களை நடக்கவிட்டனர். பின்னர், பார்வையை பாதியாக மறைத்துக் கொண்டு இவர்களை அதே இலக்கை நோக்கி நடக்க விட்டனர். அவர்களின் நடக்கும் தன்மை, வேகம் முதலியன கண்காணித்து அளவெடுக்கப்பட்டன. பின்னர் Mobile Phone-ல் பேசிய படியும், text type செய்த படியும் நடக்கவிடப்பட்டனர்.
இவ்வாறு நடந்த ஆய்வுகளில் தெரிந்த முடிவுகள் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தன. மொபைல் போனில் பேசியபடி நடக்கையில் 16% வேகமும், text type செய்கையில் 33% வேகமும் குறைந்தது. நேராக நடக்காமல் 61% திசை மாறி நடந்து பின்னர் இலக்கினை அடைய முடிந்தது. குறிப்பாக text type செய்கையில் இலக்கை விட்டுவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது.

இதனால் இவர்களின் உணர்திறன் குறைந்தது. செயல் திறன் நினைவு தப்பியது. எந்த இடத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பதையும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் நிலையையும் இந்த பழக்கங்கள் மறக்கடிக்கச் செய்கின்றன. இவையே பல ஆபத்துக்களை தானாக வலிய வரவேற்கும் வழிகளைத் திறக்கின்றன என இந்த ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளன. ஓடும் கார்களின் பாதையில் செல்வது, திறந்திருக்கும் கழிவுநீர் குழிகளில் விழுவது, மேடு பள்ளங்களில் தடுமாறி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விழுவது போன்ற விளைவுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.  எனவே நடக்கும்போது Mobile பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.

மிகப்பெரிய கோப்புக்களை சிறிதாக்க.......


இணையம் என்பது பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் மனிதனுக்கு உதவி புரிகின்றது. இதில் கோப்புகளை பரிமாற்றம் செய்வதும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
எனினும் அளவில் பெரிய கோப்புக்களை பரிமாறும் போது அதிக நேரம் செலவாவது போன்ற பிரச்சினைகளையும் எதிர்நோக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
எனவே இப்பிரச்சினையை தவிர்ப்பதற்கு கோப்புக்களின் அளவை சிறிதாக்குதல் சிறந்த வழியாக காணப்படுவதுடன் இதற்காக பல்வேறு மென்பொருட்களும் காணப்படுகின்றன.
எனினும் தற்போது அறிமுகமாகியுள்ள KGB Archiver எனும் மென்பொருள் ஏனையவற்றைவிட சிறந்ததாக கருதப்படுகின்றது. காரணம் இதன் உதவியுடன் 1GB அளவுடைய கோப்புக்களை 10MB அளவிற்கு குறைக்க முடியுமாக இருப்பதுடன் பின்வரும் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
1. .kgb, .zip போன்றவற்றிற்கு நிகரான கோப்புக்களை பயன்படுத்த முடிதல்.
2. யூனிகோட்டினை பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுதல்.
3. தானாகவே கோப்புக்களை சுருக்கும் வசதியை கொண்டிருத்தல்.
4. கடவுச்சொற்களின் மூலம் சுருக்கப்பட்ட கோப்புக்களை பாதுகாக்க முடிதல்.
இந்த மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ் இயங்குத்தளங்களில் செயற்படக்கூடியது. அத்துடன் இதை நிறுவுவதற்கு கணணியில் குறைந்தது 256 MB RAM, 1.5 GHz Processor ஆகியன காணப்படுதல் வேண்டும்.

பேஸ்புக் Timelineஐ single நிரலாக அமைப்பதற்கு.......


பிரபல்ய சமூகவலைத்தளமான பேஸ்புக் அண்மையில் தனது புதிய அம்சமான Timelineஐ அறிமுகப்படுத்தியிருந்து. இது வழமையான தோற்றத்திலிருந்து மாறுபட்டு காணப்பட்டதுடன் பதிவுகள், comments என்பன இரு நிரல்களில் அமைந்ததாகவும் காணப்பட்டது.
தற்போது இரு நிரல்களில் காணப்படும் தோற்றத்தினை தனி நிரலாக அமைப்பதற்கு Social Fixer எனும் நீட்சி உதவுகின்றது.
இந்த நீட்சியானது Mozilla Firefox, Google Chrome, Safari போன்ற மென்பொருட்களில் இயங்கக்கூடியதாக காணப்படுவதுடன். Internet Explorerல் மட்டும் தொழிற்படாதுள்ளது.
நன்மைகள்
1. செய்திகளை தேர்ந்தெடுக்கக்கூடிய மேலதிக வசதி.
2. வாசித்த பதிவுகளை மறைக்கும் வசதி.
3. தீம்களை பயன்படுத்த முடியும்.
4. பயனரின் தொழிற்பாடுகளை profileல் இருந்து தானகவே நீக்கும் வசதி.
5. பழைய பதிவுகளை தானாகவே மீட்கும் வசதி. போன்றன காணப்படுகின்றமையாகும்.
Social Fixer மூலம் தனி நிரலுக்கு மாற்றுவது எப்படி?
1. Social Fixerஐ (http://socialfixer.com/) தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.
2. பேஸ்புக் கணக்கை திறக்கவும். அப்போது பேஸ்புக்கிற்கான பல செட்டிங்ஸ் தோன்றும்.
3. அதில் settings என்பதை தெரிவுசெய்து Next பட்டனை அழுத்தவும்.
4. தற்போது தென்படும் குறடு வடிவிலான படத்தை அழுத்தி அதில் காணப்படும் Social Fixer Options என்பதற்கு செல்லவும்.
5. அங்கு காணப்படும் Timeline tab ற்கு சென்று Display Posts in Single Column box என்பதை தெரிவு செய்து தொடரந்து Save செய்து Refresh செய்யவும்.

Wednesday, February 22, 2012

அனுப்பிய மெயிலை நிறுத்த.....gmail

மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன் அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும் நபரின் இன் பாக்ஸுக்கு அந்த மின்னஞ்சல் சென்றுவிடும்.
இணையப் பழக்கவழக்கங்களில் பல வகை மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், இதிலும் ஒரு புதிய வசதியைத் ஏற்படுத்தியுள்ளது. நாம் அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற எண்ணினால், உடனடியாக அதன் சேவையை நிறுத்திவிடலாம்.
இந்த வசதியைப் பயன்படுத்த, மெயிலை அனுப்பிய சில நொடிகளில் செயல்படுத்த வேண்டும். அதிக பட்சம் 30 நொடிகளில் இதனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு Undo Send என்ற பட்டனை அழுத்த வேண்டும். இந்த கட்டளை, மெயிலைப் பெறுபவரின் இன் பாக்ஸில் இருந்து அழிப்பதன் மூலம் நடைபெறுவதில்லை.
மெயில்கள் வரிசையில் நிற்கும்போது அவை தடுக்கப்படுகின்றன. மீண்டும் அனுப்பியவரே, Undo Send என்பதனை நீக்கினால் தான் அந்த மெயில் அனுப்பப்படும். இதனைச் சோதனை செய்திட, நீங்களே உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு மெயிலை அனுப்பி, உடனேயே கேன்சல் செய்து பார்க்கலாம். இந்த வசதி வெப் அடிப்படையில் இயங்கும் ஜிமெயில் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த வசதியைப் பெற முதலில் இதனை இயக்கிவைத்திட வேண்டும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும். மெயில் தளத்தின் மேலாக, வலது புறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Labs என்னும் டேப்பில் கிளிக் செய்து Undo Send என்னும் டேப் எங்குள்ளது என்று கண்டறியவும். அல்லது, சர்ச் பாக்ஸில் Undo Send என டைப் செய்து, இந்த வசதி தரப்பட்டிருக்கும் இடத்தினை அறியலாம்.
அந்த இடத்தில் உள்ள Enable என்ற பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Save Changes என்ற பட்டனையும் அழுத்தவும். ஜிமெயில் தளத்தில் மாறா நிலையில் இதற்கு பத்து விநாடிகள் நேரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 5,10,20,30 நொடிகள் என மாற்றலாம். இந்த நேரத்தினை செட் செய்திட, செட்டிங்ஸ் பக்கத்தில் Undo Send கிளிக் செய்து Send cancellation period என்பதில், நீங்கள் விரும்பும் நேரத்தினை செட் செய்திடலாம்.
இதனை செட் செய்துவிட்டால், ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பிய பின்னரும், ஒரு பாப் அப் விண்டோவில் “Your message has been sent. Undo. View message” என ஒரு செய்தி கிடைக்கும். இதில் உள்ள Undo லிங்க்கில் கிளிக் செய்தால், அப்போது அனுப்பப்பட்ட அஞ்சல் நிறுத்தப்படும்.
ஜிமெயில் வசதியை இணையதள சர்வரின் மூலம் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். ஜிமெயிலின் SMTP அல்லது மற்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களைப் பயன்படுத்துகையில் இந்த வசதி கிடைக்காது.
அனுப்பப்பட்ட மெயிலை நிறுத்தக் கட்டளை கொடுத்த பின்னர், ஜிமெயில் அதற்கான செயல்பாட்டில் இருக்கையில், பிரவுசர் விண்டோவினை மூடினால், அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படமாட்டாது. அதன் பின்னர் அந்த இமெயில் அனுப்பப்படுவதனை நிறுத்த முடியாது.

புகைப்படங்களின் அளவை மாற்றி அமைக்க....


உங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம்.
இதற்கு Fast Stone Photo Resizer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. குறிப்பாக படங்கள் அனைத்தையும் ஒரே அளவிற்கு மாற்றிவிடுவதன் மூலம் அனைவரையும் ஈர்க்கலாம்.
அதுபோலவே வீட்டு விஷேசங்கள் போன்றவைகளுக்கு எடுத்தப் படங்களையும் இம்மென்பொருள் துணைகொண்டு படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்கி அல்லது விரித்து தேவையான பெயர் கொடுத்து மாற்றி சேமித்துக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒவ்வொரு படமாக போட்டோஷாப் போன்ற மென்பொருள்களில் திறந்து அதை எடிட் செய்வதைக் காட்டிலும், இம்மென்பொருளைக் கொண்டு ஒரு கோப்பறையில் உள்ள புகைப்படங்கள் அனைத்தையும் வேண்டிய அளவிற்கு மாற்றி நாம் சேமித்துக்கொள்ளலாம்.
உதாரணமாக உங்களுக்கு ஒரு Photo Gallery அமைப்பதற்கு 500X400 px அளவிற்கு படங்கள்(images) வேண்டும் எனில் உங்களிடம் உள்ள புகைப்படங்களையோ அல்லது இணையத்தில் எடுத்த புகைப்படங்களையோ ஒரு பொதுவான கோப்பறை ஒன்றை உருவாக்கி அதில் போட்டு வையுங்கள்.
பிறகு இம்மென்பொருளை ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோவில் புகைப்படங்கள் அடங்கிய கோப்பறையை தேர்ந்தெடுத்து புகைப்படங்களின் அளவுகளை(500pxX400px) கொடுத்து ok கொடுத்தால் போதும்.

விண்டோஸ் 7 பேக் அப்

நாம் கணணியில் அமைத்திடும் தகவல் கோப்புகளை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலையாகும்.
இதற்கெனவே விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர்.
முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும்.
இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்தவில்லை எனில், Backup என்பதன் கீழாக Windows Backup has not been set up என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும்.
இந்த புரோகிராம் தொடங்கியவுடன் உங்கள் பக் அப் கோப்புகளை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும்.
உங்கள் கணணியில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கணணியில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.
இந்த வகையில் பக் அப் கோப்புகளை பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என கணணி உங்களைக் கேட்கும்.
நீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எனில் விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் கோப்பு ஒன்றை பக் அப் கோப்பாக உருவாக்கும் அல்லது இதற்குப் பதிலாக Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து நீங்கள் பக் அப் செய்திட விரும்பும் கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பக் அப் ஆக இருக்கும் கோப்புகளின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும்.
பக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர் விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும்.
அந்த நேரத்தில் கணணி இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால் Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இறுதியாக Save settings கிளிக் செய்து பக் அப் செயல்பாட்டினை இயக்கவும்.
முதல்முதலாக பக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதனை அடுத்து எடுக்கப்படும் பக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.
ஏனென்றால் அடுத்தடுத்து பக் அப் எடுக்கப்படுகையில் மாற்றம் செய்யப்பட்ட கோப்புகளில் மட்டுமே பக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பக் அப் எடுக்கப்பட்ட கோப்புகளுடன் வைக்கப்படும்.

Thursday, February 16, 2012

இணையம் மூலமாக வீட்டுக் கணினியை இயக்க........


TweetMyPC என்றால் என்ன? நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டுக் கணினியை இயக்குவதை சாத்தியமாக்கிறது. இணையதளம் மூலமாக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க இது உதவுகிறது.
1. இதற்காக வெறுமேனே உங்கள் கணினியில் இந்த செயலியை தறவிறக்கம் ( Download) செய்யவும்..
2. பின்னர் www.Twitter.com என்ற தளத்துக்கு சென்று புதிய Twitter கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும். இக் கணக்கு TweetMyPC க்கு மட்டும் பிரத்தியோகமானது
3. உங்கள் பயனாளர் கணக்கின் பெயர் , கடவுச்சொல் கொடுத்து TweetMyPC இயக்கவும்.
அதே பயனாளர் கணக்குடன் எங்கிருந்தாவது உள் நுளையும்போது உங்கள் கணினியை நிறுத்தவோ ( Shutdown ) செய்யவோ மீள் ஆரம்பம் (Restart) செய்யவோ முடிகிறது. சிறுவர் கூட இதை எளிதாக செயல்படுத்தலாம்.

கணணியில் உள்ள தகவல்களை பெரிதுபடுத்தி பார்க்க

உங்களது கணணியில் உள்ள கோப்புகள் மற்றும் தகவல்களை பெரிதுபடுத்தி பார்ப்பதற்கு Magnify என்ற மென்பொருள் உதவி புரிகிறது.
இந்த மென்பொருளை பதிவிறக்கி, கணணியில் நிறுவிக்கொள்ளவும். அதன் பின் உங்கள் டாக்ஸ்பாரில் பூதக்கண்ணாடியுடன் கூடிய ஒரு ஐகான் தோன்றும்.
அந்த ஐகானை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு தேவையான பகுதியை தெரிவு செய்து கொள்ளவும். உங்கள் கர்சர் எங்கு எங்கு செல்கின்றதோ அந்த பகுதியெல்லாம் பெரிதுபடுத்தி உங்களது விண்டோவில் தெரியவரும்.
அதில் கீழ்புறம் உங்களுக்கு தேவையான அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். தேவையான அளவினை கொடுத்து படத்தினை பெரியதாக மாற்றிக் கொள்ளலாம்.
அதைப்போல நீங்கள் கர்சரை கொண்டு குறிப்பிடும் பகுதியின் நிற அளவினை பார்த்துக் கொள்ளலாம்.

Tuesday, February 14, 2012

கணணியின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு மென்பொருள்...

கணணியை உபயோகிக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் தங்கள் கணணி குறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதற்கு System Explorer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில் குறிப்பிட்ட சுட்டியில் சென்று மென்பொருளை தரவிறக்கி, கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் தோன்றும் விண்டோவில் ப்ரோகிராம்களின் தொடக்கங்கள் குறித்த தகவல்கள், எக்ஸ்ப்ளோரர், IE துணை நிரல்கள், Uninstallers, சேவைகள், இயக்கிகள், இணைப்புகள் மற்றும் திறக்கப்பட்ட கோப்புகள் பற்றி விரிவான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

புதிய ஐ பாட்கள் 4G ​தொழில்நுட்​பத்துடன்

நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்துவரும் தொழில்நுட்ப யுகத்தில் அப்பிளின் அடுத்த பதிப்பாக வரவிருக்கும் ஐ பாட்கள் நான்காம் தலைமுறை(4G) தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்துடன் அறிமுகமாக இருக்கின்றன.
தற்பொழுது காணப்படும் ஐ பாட்கள் மூன்றாம் தலைமுறை தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்துடன் காணப்படுகின்றன, எனினும் இதன் தகவல் பரிமாற்றத்தைவிட நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தின் வேகம் அதிகம் என்பதுடன் இவை வயர்லெஸ் மூலமான தகவல் பரிமாற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இத்தொழில்நுட்பமானது அதிகளவு மின்கலப்பாவனையில் இயங்கக்கூடியது. இப்போன்கள் மார்ச் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வொன்றில் வைத்தே அறிமுகப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பிளின் ஐ பேட் 2வும் இதுபோன்றே கடந்த வருடம் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐ பேட் 3ஆனது அதன் ஐ பேட் 2வின் தோற்றத்தினை ஒத்ததாகவே காணப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் முன்னையதைவிட தெளிவான திரை, ஐ போன் 4 எஸ் இல் அறிமுகப்படுத்தப்பட்ட “Siri” எனப்படும் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்படும் வசதியினையும் இது உள்ளடக்கியிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் A6 ப்ராசசரை ஐ பேட் 3 கொண்டிருப்பதனால் அதில் இயங்கும் வகையில் அப்ளிகேசன்களை அப்பிள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகின்றது. இதைவிட மேலும் பல தொழில்நுட்ப வசதிகளையும் இது உள்ளடக்கியிருக்குமெனவும் நம்பப்படுகின்றது.
இதன் இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. எது எவ்வாறாயினும் மார்ச் மாதம் அப்பிள் விரும்பிகளுக்குக் கொண்டாட்டாம் தான்.

Monday, February 13, 2012

சாதனை படைக்க தயாராகும் UBISLATE.....


  • Data Wind நிறுவனம் தனது UBISLATE மற்றும் Aakash 7  Tablet-களின் பெயர்களை மாற்றி இருக்கிறது. அதாவது Aakash Tablet UBISLATE  எனவும் UBISLATE -7 மற்றும் UBISLATE 7+ எனவும் பெயர் மாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த தகவல் Data Wind-ன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வந்திருக்கிறது. இந்த 2 Tablet-களுமே மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டவை ஆகும்.
  • இந்த UBSILATE 7+ Tablet வாங்குவதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாதத்திற்க்குள்ளாகவே இந்த Tablet கிடைத்துவிடும். மேலும் மார்ச் வரை விண்ணப்பிக்கலாம். இந்த UBISLATE 7+ Tablet  Android Gingerbread இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த Tablet Cortex A8 – 700 MHz Processor, HD வீடியோ கோ ப்ராசஸரையும் கொண்டுள்ளது.
  • இந்த UBISLATE 7+ Tablet-ன் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 7.5 x 4.7 x 0.6 inch அளவுள்ள தொடு திரையைக் கொண்டுள்ளது. இதன் WEBCAM 0.3 Mega Pixel HT வசதியுடன் built-in மைக்கையும் கொண்டுள்ளது.
  • சேமிப்பு வசதியைப் பார்த்தால் இந்த டேப்லெட் ப்ளாஷ் ஈ-ப்ரோம் கொண்டுள்ளது. இது 2 ஜிபி RAM கொண்டிருக்கிறது. மேலும் இதன் சேமிப்பு வசதியை விரிவுபடுத்த microSD மற்றும் ட்ரான்ஸ்ப்ளாஷ் கார்டுகளையும் இந்த Tablet கொண்டிருக்கிறது. அதோடு WiFi மற்றும் HDMI போர்ட்டும் உண்டு. ஆனால் Bluetooth வசதி இந்த Tablet-ல் கிடையாது. மேலும் USB 2.0வைக் கொண்டுள்ளது.
  • பொதுவான அம்சங்களாகப் பார்த்தால் இந்த Tablet மின்திறனிற்காக 3200 MHz battery கொண்டுள்ளது. இந்த battery  5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும். மேலும் இந்த Tablet-ன் மொத்த பரப்பு 190.5 x 118.5 x 15.7 மிமீ ஆகும். அதோடு இதன் மொத்த எடை 350 கிராம் மட்டுமே. இந்த UBISLATE Tablet LINUX இயங்கு தளத்தில் இயங்குகிறது.
  • இதன் சந்தை விலை சுமார் 2999/- மட்டுமே. இந்த UBISLATE 7+ Tablet  போல குறைந்த விலையில் எந்த ஒரு Tablet-ம் இதுவரை வரவில்லை. அதனால் இதன் விற்பனை மிக அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதை உலகின் மிகக் குறைந்த விலை Tablet என்றும் அழைக்கலாம்.