Pages

Subscribe:

Ads 468x60px

Monday, January 30, 2012

தாங்கள் வாங்கிய பென்டிரைவ் தரமானதா என கண்டறிய.....

இன்றைய கணணி உலகத்தில் USB கருவிகளான பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவை தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன.
இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன.
சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென்டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கூட கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென்டிரைவ் பழுதாயிருக்கிறதா என்றும் கண்டுபிடிக்க முடியாது.
பென்டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது.
இதன் மூலம் Read Speed, Write Speed, Sector wise Errors போன்ற விடயங்களை சோதித்து அறியலாம். இதனால் நமது பென்டிரைவ் தரமாக உள்ளதா என்றும் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கியவுடன் ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் பென்டிரைவை கணணியில் செருகவும். பென்டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது நலமானது. இதில் 3 வகையான Access Type கள் இருக்கின்றன.
Use Temporary file என்பதைக் கிளிக் செய்தால் Write and Read சோதனையைச் செய்ய முடியும்.
உங்கள் பென்டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Drive என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும்.

Test Length என்பதில் One Full Cycle என்பதைத் தெரிவு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென்டிரைவ் சோதிக்கப்படும்.
ஒவ்வொரு கோப்பு செக்டார்களாக(File Sector)களாக சோதிக்கப்பட்டு வரும். இறுதியில் ஒவ்வொரு செக்டாரும் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்கள் பென்டிரைவில் எந்த பிரச்னையும் இல்லை என்று அர்த்தம். இத்துடன் இந்த பென் டிரைவின் வேகம் மற்றும் பிழைகள் இருந்தாலும் காண்பிக்கப்படும்.

Saturday, January 28, 2012

Start Menuவில் வீடியோ "லிங்" உருவாக்க.....

Pictures, Music ஆகியவற்றின் Folderகளை இலகுவாக சென்றடைவதற்கு விண்டோஸ் 7ன் Start Menuவில் அவற்றின் "லிங்" (link) இயல்பாகவே காணப்படும்.
ஆனால் வீடியோ Folderக்கு அவ்வாறான வசதி நேரடியாக கொடுக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால் அவ்வசதியை நாமாக உருவாக்க முடியும்.
1. Start Menuற்கு சென்று Rightclick செய்து Properties என்பதை தெரிவு செய்யவும்.
2. தோன்றும் சாளரத்தில் Start Menu tab ற்கு சென்று Customize ஐ தெரிவு செய்யவும்.
3. அதன் பின் தோன்றும் சாளரத்தில் Videos என்பதில் "Display as a link" என்பதை தெரிவு செய்து OK செய்யவும்.

பேஸ்புக்கிலும் Angry Birds விளையாட்டு......

கணணி விளையாட்டு பிரியர்கள் அனைவருக்கும் பிடித்தமான விளையாட்டு என்றால் அது Angry Birds விளையாட்டு தான்.
இதில் பல்வேறு தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. உலகம் முழுவதிலும் 500 மில்லியன் முறை இந்த விளையாட்டு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதன் முதலில் கைபேசிக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் கணணிகளுக்கும் வந்தது. இதனையடுத்து சமூக தளமான கூகுள் பிளசில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விளையாட்டு தற்போது பேஸ்புக்கிலும் வரவிருக்கிறது.
இதனை பெற Angry Birds விளையாட்டின் Angry Birds Facebook Page சென்று Like செய்தால் இந்த விளையாட்டு வெளிவந்தவுடன் அதற்கான அழைப்பு உங்களுக்கு அனுப்பப்படும்.
எதிர்வரும் பிப்ரவரி மாதம் 14ம் திகதி முதல் இந்த விளையாட்டை பேஸ்புக் தளத்திலும் விளையாடி மகிழலாம்.

கணினி தன் முழு திறனுடன் செயல்பட....




”என்னோட லேப்டாப் ரொம்பவும் ஸ்லோ ஆயிட்டதாலே லைஃபே ஸ்லோ ஆன மாதிரி ஒரு ஃபீலிங்…, ஒரு முறை விண்டோஸை ரீ-இன்ஸ்டால் செய்து பார்க்கணும்.” என்று எனக்கு தெரிந்த நபர் ஒருவர் அங்கலாய்க்க, அவர் கூற்றில் சற்று மேல் உண்மை இருப்பதாக உணர்ந்தேன். அதாவது இன்றைய காலகட்டத்தில் நமது கணினி தனது முழு திறனுடன் வேலை செய்தால்தான் நாமும் நமது முழு திறனுடன் செயல்படுவது போல் நமக்கு சில சமயத்தில் தோன்றும். என்னதான் நல்ல கான்ஃபிகரேஷனுடன் கணினியை வாங்கியிருந்தாலும், தினமும் உபயோகிக்க உபயோகிக்க, கணினியின் வேகம் படிப்படியாக குறைந்து கொண்டே போவது போல் ஒரு உணர்வு பலருக்கும் உண்டு.
ஆனால் அதற்காக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அவ்வப்பொழுது ரீ-இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதாவது உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிகவும் மோசமாக கரப்ட் ஆகாமலிருந்தால் அதை ரீ-இன்ஸ்டால்தான் செய்து ஆக வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அது மட்டுமல்லாமல், உங்கள் கணினியின் செயல் திறன் மாதாமாதம் குறைந்து கொண்டே போக அனுமதித்து விட்டு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ரீ-இன்ஸ்டால் செய்வதை விட, உங்கள் கணினி தினமும் முழு திறனுடன் அருமையாக செயல்படுமாறு பார்த்துக் கொள்வதே சிறந்தது.
ரொம்ப சரிதான்! கணினி தன் முழு திறனுடன் செயல்படுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டோம். ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்பதுதான் இப்பொழுது கேள்வி. இங்கே முக்கியமானது என்னவென்றால் கணினி முன்னாலான நமது நேரம் முழுவதையும், அதை சரி செய்வதிலேயே செலவிடக் கூடாது ! மினிமம் பெய்ன்! மேக்ஸிமம் கெய்ன்! இது எப்படி நம்மால் சாத்தியப்படக்கூடும் என்று இப்பொழுது சுருக்கமாக காண்போம்.
1. முதலாவது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட்டடாக வைத்திருக்க வேண்டும். அதாவது செக்யூரிட்டி அப்டேட் அவ்வப்பொழுது என்ன இருக்கிறதோ அதை நிறுவிக் கொள்ள வேண்டும். உங்கள் கணினியில் இருப்பது விண்டோஸ் எக்ஸ்.பி. என்றால், விஸ்டா மற்றும் வின்டோஸ் 7 என்று புதிதாக நிறுவ வேண்டும் என்று இதற்கு பொருள் இல்லை. எக்ஸ்.பி. செக்யூரிட்டி அப்டேட்டுகளை அவ்வப்பொழுது நிறுவிக் கொண்டால் போதுமானது . இதனால் நமது நேரமும் முயற்சியும் அதிகமாக செலவு ஆகாதா? ஆகாது! ஆட்டொமேட்டிக் அப்டேட்டை கான்ஃபிகர் செய்து கொண்டால் போதுமானது. விண்டோஸ் தானே அவ்வப்பொழுது செக்யூரிட்டி அப்டேட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்வதோடு கணினியில் நிறுவவும் செய்யும். உங்கள் கணினியில் ஒரிஜினல் விண்டோஸ் இல்லை எனில், உபண்டு போன்ற இலவச லீனக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நிறுவிக் கொள்ளவதைப் பற்றி சிந்தியுங்கள்! (உபண்டு-விலும் அப்டேட்டுகளுக்கான நோட்டிஃபிகேஷன்கள் உண்டு!)
2. இரண்டாவது, கணினியில் வைரஸ் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காஸ்பர்ஸ்கி, ஏ.வி.ஜி. போன்ற ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் நியாயமான விலையில் கிடைக்கின்றது. இலவச ஆன்டி வைரஸ் வேண்டும் என்றாலும் ஏ.வி.ஜி. ஃபிரீ, கொமோடோ போன்றவைகள் உள்ளன. பதிவிறக்கம் செய்து உபயோகிக்கவும். முக்கியமாக ஆன்டி வைரஸ் டெஃபெனிஷன்களை அவ்வப்பொழுது புதுப்பிக்கவும்.
3. தேவையற்ற கோப்புகளை அவ்வப்பொழுது நீக்கவும். முக்கியமாக தற்காலிகமாக உருவாகும் கோப்புகளை நீக்கவும். இதற்காக விண்டோசிலேயே உள்ள டிஸ்க் கிளீனப் யுடிலிட்டியை உபயோகப்படுத்துங்கள். வேண்டுமானல் இந்த டிஸ்க் கிளீனப் யுடிலிட்டியை டாஸ்க் ஷெட்யூலரின் வாயிலாகவும் இயக்கலாம்!
4. கணினி இயங்கும் பொழுது பல வகையான கோப்புகளை ஹார்ட் டிஸ்கிலிருந்து உபயோகப்படுத்தும் அதாவது கோப்புகளில் இருந்து படிக்கவும் எழுதவும் செய்யும். நாளடைவில் கோப்புகள் ஒவ்வொன்றும் ஹார்ட் டிஸ்கில் ஒரே இடத்தில் கோர்வையாக இல்லாமல் நொறுங்குண்டு பல இடங்களில் சங்கிலித் தொடராக அமையப்பெறும். அவ்வாறு நொறுங்குண்ட கோப்புகளில் இருந்து தகவலை படிப்பதற்கும், எழுதுவதற்கும் காலம் தேவைக்கு அதிகமாக செலவாகும். இந்த நிலையை சரி செய்ய, ஹார்டு டிஸ்கு டிரைவுகளை டிஃபிராக்மெண்ட் செய்யுங்கள். இந்த டிஃபிராக்மென்டேஷன் பணி நேரத்தை மிகவும் விழுங்குவதால், டிஃபிராக்மென்டரை துவக்கி விட்டபின் மணிக்கணக்கில் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது! கணினி அல்லாது வேறு வேலையில் ஈடுபடத் தொடங்கும் முன் (உணவருந்தும் முன்?) டிஃபிராக்மென்டரை துவக்கி விட்டுச் செல்லுங்கள்!!
மேற்கண்ட நான்கையும் அவ்வப்பொழுது செய்து வந்தால் கணினியில் செயல் வேகம் குறைவதை தடுக்கலாம்! நாமும் முழுத் திறனுடன் செயல்படும் ஒரு உணர்வைப் பெறலாம்!!

Friday, January 27, 2012

26 புதிய கிரகங்களை கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.....

சூரிய மண்டலத்துக்கு வெளியே 26 புதிய கிரகங்களை கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
இந்த 26 கோள்களும் நட்சத்திரங்களை(சூரியன்கள்) சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கோளும் தனது நட்சத்திரங்களை மிக நெருக்கமாக சுற்றி வருவதால், இவற்றில் வெப்பம் மிக மிக அதிகமாக இருக்கலாம் என்றும், இதனால் அங்கு உயிர்கள் வசிக்க வாய்ப்பில்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.
கெப்ளர் விண்கலம் ஒரு மாபெரும் விண் தொலைநோக்கியாகும். கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் இதுவரை நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே 61 கோள்களைக் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 26 கிரகங்களும் பல்வேறு அளவுகளில் உள்ளன. பூமியை விட ஒன்றரை மடங்கு பெரிய கிரகமும் உள்ளது. இன்னொன்று சூரிய குடும்பத்தின் பெரிய கோளான வியாழன் கிரகத்தை விட பெரிதாக உள்ளது.
இந்த 26 கிரகங்களும் 11 நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. சில நட்சத்திரங்களை ஒரு கிரகமும், சில நட்சத்திரங்களை 5 கிரகங்களும் சுற்றிக் கொண்டுள்ளன.
இதில் ஒரு கிரகம் தனது நட்சத்திரத்தை, மிக மிக நெருக்கமாக சுற்றிக் கொண்டுள்ளது. இது சூரிய குடும்பத்தின் முதல் கிரகமான புதனுக்கும், சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விடக் குறைவாகும்.
இதனால் அதில் பயங்கர அளவிலான வெப்பம் நிலவும் என்பதால் உயிர்கள் வாழ வாய்ப்பில்லை. மற்ற கிரகங்களும் மிக நெருக்கமாக நட்சத்திரங்களை சுற்றி வருவதால் அவையும் உயிர்களை சுமந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது நாசா.
இந்த கோள்களில் சில 6 நாட்களுக்கு ஒரு முறையும், சில 143 நாட்களுக்கு ஒரு முறையும் தங்களது நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன.

Thursday, January 26, 2012

பேஸ்புக்கில் Slideshow படங்களை உருவாக்க......













பேஸ்புக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் தமது அன்றாட நடவடிக்கைகளை பகிர விரும்புவார்கள். அதனடிப்படையில் தினந்தோறும் பலவிதமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் பேஸ்புக்கில் படங்களை பகிருவதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் விசேடமான முறையாக Slideshow காணப்படுகின்றது.
இவ்வாறு சிறந்த முறையில் Slideshowக்களை உருவாக்குவதற்கு Magix Slideshow Maker என்ற மென்பொருளை பயன்படுத்த முடியும். இதில் நூற்றுக்கணக்கான effects, transitions, music, sound காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
இம்மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Slideshow வை வீடியோவாக மாற்றி பேஸ்புக் தளத்தில் பகிர முடியும். தவிர YouTube, Flickr போன்ற தளங்களிலும் நேரடியாக பதிவேற்ற முடியும்.



பாதுகாப்பா​ன பென்டிரைவை உருவாக்க......

தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், தகவல்களை இலகுவாக எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இருந்தும் அத்தகவல்களை கணணி வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படுகின்றது. இத்தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு USB Write Protecter என்ற ஒரு மென்பொருள் பயன்டுகின்றது.
பயன்படுத்தும் முறை:
1. குறித்த பென்டரைவை கணணியுடன் இணைக்கவும்.
2. தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்.
3. பின் அம்மென்பொருளை இயக்கவும். அவ்வாறு இயக்கும் போது கீழே காட்டப்பட்டுள்ளவாறு ஒரு சாளரம்(Image) தோன்றும்.
4. அதில் USB write protection ON என்பதை தெரிவு செய்யவும்.
இப்பொழுது குறித்த பென்டிரைவில் காணப்படும் கோப்புக்களை அழிக்கவோ அல்லது பிரதிசெய்யவோ(copy) முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமெனில் மீண்டும் மென்பொருளை இயக்கி USB write protection OFF என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

Tuesday, January 24, 2012

பெண்களுக்கு தனி சமூக இணையதளம்…


பேருந்தில் லேடீஸ் special போல இப்போது இணையதளத்திலும் வந்து விட்டது லேடீஸ் special. பெண்களுக்கென தனி சமூக இணையதளத்தை தொடங்கி உள்ளார் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
www.luluvise.com என்ற இந்த இணையதளத்தில் ஆண்கள் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. Facebook போன்ற சமூக இணையதளங்களையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
thanks:tech tamil

Pdf கோப்புக்களை Doc ஆக மாற்ற .....

கணணி உலகமானது இன்று "Cloud Computing" என்ற ஓன்லைன் முறையை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இதனால் மென்பொருட்களை கணணியில் நிறுவி செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும் இன்று ஓன்லைனில் செய்யும் வசதி கிடைத்துள்ளது.
அதற்கிணங்க Pdf கோப்புக்களை Doc கோப்புக்களாக மாற்றுவதற்கும் நாம் ஓன்லைன் தளங்களை பயன்படுத்த முடியும்.
அதற்காக தெரிவுசெய்யப்பட்ட சிறந்த ஐந்து தளங்களே இவை
1. FreePDFtoWord: இத்தளத்தில் Pdf கோப்புக்களை மட்டும் Doc கோப்புக்களாக மாற்ற முடிவதுடன், paragraph,  tables போர்மட்களை எமக்கு விரும்பியவாறு மாற்றமுடியும், தேவையேற்படின் இணைக்கப்பட்டுள்ள படங்கள அகற்றிய பின் Doc கோப்பாக மாற்றவும் முடியும்.
2. PDFtoWordConverter: இத்தளத்தம் ஓன்லைனில் கோப்புக்களை மாற்றும் வசதியை கொண்டிருப்பதுடன் சோதனைப்பதிப்பு மென்பொருளையும் கொண்டிருக்கின்றது. அத்துடன் இங்கு Pdf கோப்புக்களை Doc,Text, Image, HTML போன்ற கோப்புக்களாகவும் மாற்ற முடியும்.
3. PDFOnline: இங்கு உங்களது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கோப்புக்களை மாற்ற முடிவதுடன் மாற்றிய கோப்புக்களை தேவையான சந்தர்ப்பங்களில் மின்னஞ்சலுக்கு சென்று தரவிறக்கிக்கொள்ள முடியும். அத்துடன் இதன் சோதனைப்பதிப்பு மென்பொருளையும் பயன்படுத்திக்கொள்ள  முடியும்.
4. PDFtoWord: இங்கு Pdf  கோப்புக்களை Doc, Rtf கோப்புக்களாக மாற்றமுடியும். இத்தளத்திலும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவேண்டும் என்பதுடன் சோதனைப்பதிப்பு மென்பொருளும் கிடைக்கின்றது.
5. ZamZar: இலவசமாக Pdf  கோப்புக்களை Doc   மாற்றுவதற்குரிய மிகச்சிறந்த தளமாக இது கருதப்படுகின்றது. எந்தவிதமான பதிவுகளையும் இத்தளத்தில் மேற்கொள்ள வேண்டியதில்லை எனினும் மின்னஞ்சல் முகவரி வழங்கவேண்டியது அவசியம்.

குழந்தை அழுதால் தெரிவிக்கும் மென்பொருள்,.......

குழந்தைகளை கவனிக்க யாருமே இல்லாத பட்சத்தில் குழந்தை அழுதால் அறியத்தருவதற்கு ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் CRY GUARD.
இந்த மென்பொருளை ஒரு கைபேசியில் நிறுவிக் கொண்டு மற்றொரு கைபேசியின் நம்பரை கொடுக்க வேண்டும். மென்பொருள் நிறுவிய கைபேசியை குழந்தையின் அருகில் வைத்து விடுங்கள்.
மற்றொரு கைபேசி உங்களிடம் இருக்க வேண்டும். உங்களது குழந்தை அழுதாலோ அல்லது சிறு அசைவுகள் ஏற்பட்டாலோ உங்களுடைய கைபேசிக்கு அழைப்பு வரும்.

Monday, January 23, 2012

புற்றுநோயை கண்டறியும் ஸ்மார்ட் போன்கள்....

மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
அதாவது ஜேர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றில் வரையப்பட்டிருந்த பயனுள்ள வேதியல்(Angewandte Chemie) எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவாறு தொடுதிரை தொழில்நுட்பத்தை(Touch Screen) புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்த முடியும் என்று  கூறியுள்ளனர்.
இதற்காக தொடுதிரை கொண்ட ஸ்மார்ட் போன்கள், PDA மற்றும் தொடுதிரை தொழில்நுட்பத்தைக்கொண்ட ஏனைய இலத்திரனியல் சாதனங்களையும் இதற்காக பயன்படுத்தமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இத்தொழில்நுட்பமானது உடலிலுள்ள புரதம், DNA(பரம்பரை அலகு மூலக்கூறு) என்பவற்றிலிருக்கும் இலத்திரன் ஏற்றங்களுக்கு இசைவாக  செயற்படுவதால் இவ்வாறு புற்றுநோயை கண்டறிய சாதகமாக பயன்படுத்த முடியும் என்பதில் தமக்கு 100 சதவீத நம்பிக்கை இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய....

பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் மென்பொருள்கள் உதவியுடன் யூடியூப் வீடியோக்களை MP3, MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம்.
இருப்பினும் மிக எளிதாக ஒரே சொடுக்கில் யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வற்கு ஒரு வழி உள்ளது.
YTBYCLICK என்ற டூல்பார் மூலம் யூடியூப் தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம். இதனை குரோம், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பொக்ஸ் போன்ற உலாவிகளில் நிறுவ முடியும்.
தெரிவு செய்யப்பட்ட வீடியோக்களை தரவிறக்கம் செய்ய டூல்பாரில் உள்ள ICON களை கிளிக் செய்தால் போதும், உங்களுக்கு புதிய பக்கத்தில் நீங்கள் தெரிவு செய்த வீடியோ தரவிறக்கத் தொடங்கும்.

விண்டோஸ் 7ற்குரிய தீம்களை இலவசமாக பதிவிறக்க

நீங்கள் பயன்படுத்தும் கணணியினை தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்தவிடயம்.
இருந்தும் விண்டோஸ் 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்களுக்கு சலித்திருக்கும்.
உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
கீழுள்ள இணைப்பில் அழுத்துவதன் மூலம் குறித்த தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு செய்து Download என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் கணணியில் சேமித்து பின் வழமையான முறையில் உங்கள் கணணியின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம்.

75ற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு..Free Opener

நீங்கள் பயன்படுத்தும் கணணியின் வேகம் வழமையைவிட குறைவாக காணப்படுவதற்கு, அதிகளவான மென்பொருட்களை நிறுவியிருப்பதும் பிரதான காரணங்களில் ஒன்றாகும்.
அதாவது கணணியில் பல்வேறு வகையான கோப்புக்களை திறப்பதற்காக தனித்தனியாக மென்பொருட்களை நிறுவியிருப்போம்.
இதனால் வன்தட்டில்(Hard Disk) இடம் வெகுவாக குறைவடைவதோடு ஒன்றிற்கு மேற்பட்ட மென்பொருட்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதானல் பிரதான நினைவகத்தின்(RAM) அளவும் குறைவடைகின்றது. இதனால் உங்கள் கணணியின் வேகம் குறைவடைய வாய்ப்புள்ளது.
இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு மிகவும் உதவியாக உள்ள மென்பொருளே Free Opener ஆகும். இதில் 75ற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறக்க முடியும். 25mb அளவுடைய இம்மென்பொருள் மூலம் பின்வரும் கோப்பு வகைகளை திறக்க முடியும்.
Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)
PowerPoint Presentations (.ppt, .pptx, .pps)
Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
Microsoft Word Documents (.doc, .docx)
SRT Subtitles (.srt)
RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
Icons (.ico)
Open XML Paper (.xps)
ML Paper (.xps)
Torrent (.torrent)
Flash Animation (.swf)
Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
Rich Text Format (.rtf)
Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
Apple Pages (.pages)
Microsoft Excel Documents (.xls, .xlsm, .xlsx)
Comma-Delimited (.csv)
Outlook Messages (.msg)
PDF Documents (.pdf)
vCard Files (.vcf)
EML Files (.eml)

Sunday, January 22, 2012

உலகின் மிகவும் எளிமையான மொபைல்போன்.....


எத்தனை மாடல்கள்,எத்தனை அம்சங்கள்,எவ்வளவு வசதிகள்.புது புது போன்கள் சந்தையில் அறிமுகமாகி கோண்டே இருக்கின்ற‌ன. நவீன மொபைல்போன்கள் உங்களை திக்குமுக்காட செய்துவிடும்.

பார்த்து பார்த்து எந்த போனை வாங்கினாலும் சரி அதனைவிட சிறந்த போன் சந்தையில் அறிமுகமாகிவிடும்.விலையும் பார்த்தால் மலிவாக இருக்கும். புதிய போனை பார்த்ததுமே பழைய போனை தூக்கி போட்டு விட்டு அதனை வாங்கிகொள்ள மனது துடிக்கும். மொபைல்போனை பொருத்தவரை யாருக்குமே முழுநிறைவு என்பதே சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

விரைவில் தினம் தினம் பயன்படுத்தி தூக்கி எறியும் யூஸ் அண்டு துரோ போன் அறிமுகமானால் கூட வியப்பில்லை.அந்த அளவுக்கு மொபைல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 

ஒரு பொருளை வாங்கினோம் என்றால் அது பழுதடையும் வரை தூக்கியெறியாமல் பயன்படுத்தி வந்த கால‌ம் எங்கே,நேற்று வாங்கிய போனை இன்று வெறுப்போடு பார்க்கும் காலம் எங்கே? இப்படியெல்லாம் கவலைபடுபவராக நீங்கள் இருந்தால்,உங்களை மகிழ்விக்க கூடிய சூப்பர் போன் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. 

சூப்பர் போன் என்ற‌வுடன் சகல‌ வசதிகளுடனும் கூடிய எல்லாம் வல்ல போன் என்று நினைக்க வேண்டாம்.இந்த போன் மிக மிக எளிமையானது. இந்த போனில் இண்டெர்நெட் கிடையாது.

இமெயில் அனுப்ப முடியாது.வை பை வசதி எல்லாம் இல்லை, பேஸ்புக் பார்க்க முடியாது.கேமிரா இல்லை.இவ்வளவு ஏன் எஸ்எம்எஸ் கூட அனுப்ப முடியாது. இந்த போனில் இருந்து கால் செய்யலாம்.வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லலாம்.

அவ்வளவே. உலகின் மிகவும் எளிமையான மொபைல்போன் என்னும் அடைமொழியோடு டச்சு நிறுவனம் இந்த போனை அறிமுகம் செய்திருக்கிறது.மொபைல்போன்கள் கையடக்க கம்ப்யூட்டர்கள் என்று வர்ணிக்கப்படும் ஸ்மார்ட்போன்களாக உருவெடுத்திருக்கும் நிலையில் இவற்றின் அடையாளமாக கருதப்படும் ஐபோனுக்கு எதிரானதாக‌ இந்த ஜான்ஸ்போன் அறிமுகமாகியுள்ளது. 

ஒரு போனில் நீங்கள் அடிப்படையில் எதனை எதிர்பார்ப்பீர்களோ அதற்கு மட்டுமே இந்த போன் பயன்படும்.அதாவ‌து மற்றவர்களோடு பேசலாம்.மற்றபடி வேறு எந்த வசதிகளும் கிடையாது.அதாவது வேறு எந்த தொல்லைகளும் இல்லை. 

பேசி முடித்தொமா வேறு வேலையை கவனிக்க துவங்கினோமா என்று இருக்க உதவும் இந்த போனை எப்படி பயன்படுத்துவது என விளக்க பக்கம் பக்கமாக நீளும் கையேடு இல்லை.இதன் கையேடும் எளிமையாக ஒரே பக்கத்தில் ரத்தினச்சுருக்கமாக இருக்கிற‌து. 

அலங்கார ரிங்டோன் எல்லாம் இல்லாமல் தொழில்நுட்ப துறவறம் கொண்டிருக்கும் இந்த மொபைல்போனில் ஆயிரம் செல்போன் எண்களை எல்லாம் சேமித்து வைக்க முடியாது. சொல்லப்போனால் போனில் அட்ரஸ் புக்கே இல்லை.

அதற்கு பதிலாக போனோடு ஒரு குட்டி புத்தகம் இணைக்கப்ப‌ட்டுள்ளது.அதில் தான் எண்களை குறித்து கொள்ள வேண்டும். அதே போல் இந்த போனில் ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று வாரங்களுக்கு கவலையே இல்லாமல் இருக்கலாம். உலகின் எந்த மூளையிலும் இதனை பயன்ப‌டுத்தலாம். 

வெளியூர் செல்லும் போதோ,ஜாலியாக‌ விளையாடும் போதோ.இந்த போன் கையில் இருந்தால் இதன் அருமை நன்றாக புரியும்.பார்த்து கொண்டிருக்கும் வேலையில் எந்த இடையூறும் இல்லாமல் அதே நேரத்தில் தகவல் தொடர்பையும் இழக்காமல் இருக்க இந்த போன் பேரூதவியாக இருக்கும். 

சாதாரண செல்போன்களே கூடுதல் சிறப்பம்சங்களோடு வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் உருவக்கப்ப்படுள்ள இந்த எளிமையான போனை ஒரு புரட்சி என்று கூட சொல்லலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தக்கூடிய, அடிப்படை வசதி மட்டுமே கொண்ட எளிமையான மொபைல்போன்கள் சில ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கிட்டத்தட்ட எளிமையை ஒரு கொள்கையாக‌வே கொண்டது போல இந்த போன் வந்துள்ளது. நவீன வாழ்வின் சிக்கல்கள் இல்லாத எளிமையான வாழ்க்கைக்கு திரும்பும் கன்வை போல,போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தும் எளிமையான யுகத்திற்கு இந்த போன் உங்களை அழைத்து செல்லும்.

Saturday, January 21, 2012

கைபேசி வழியாக பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம்.....


மொபைல் போன்களில் சென்ற ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் அருமையான தொழில் நுட்பம் நியர் பீல்ட் கம்யூனிகேஷன் (Near Field Communication) என்பதாகும். மொபைல் போன்களைப் பயன்படுத்தி, நாம் பணம் செலுத்த இந்த தொழில் நுட்பம் வழி செய்கிறது.

2011 ஆம் ஆண்டில் மொபைல் பயன்பாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாக இதனை வல்லுநர்கள் கருதுகின்றனர். அந்த வகையில், இந்த வசதியுடன் கூடிய 3 கோடியே 50 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளதாக ஐ.எம்.எஸ். ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில், இது 8 கோடியாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 12 மாதங்களில், பல நிறுவனங்கள், குறிப்பாக சாம்சங், ஆர்.ஐ.எம்., நோக்கியா மற்றும் எச்.டி.சி., இந்த வசதியுடன் மொபைல் போன்களை வடிவமைத்துத் தந்துள்ளன.

நவீன தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் இந்த வசதியுடன் கூடிய மொபைல் போனை இன்னும் அறிமுகம் செய்திடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"போனை அசைத்து பணத்தைச் செலுத்திடு' என்பதுதான் இந்த தொழில் நுட்பம் தரும் பெரிய வசதி. 4 அங்குல இடைவெளியில் இரண்டு சாதனங்கள், அவற்றை அசைப்பதின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்த தொழில் நுட்பம் வசதி தருகிறது.

தற்போது லண்டன் நகரில் ட்ரான்ஸ்போர்ட் கார்ட்கள் மூலம் இந்த வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொருட்களை விற்பனை செய்திடும் கடைகளில் உள்ள சிறிய டெர்மினல் முன்னால், செலுத்த வேண்டிய பணத்தை மொபைலில் குறிப்பிட்டு சற்று அசைத்தால், செலுத்தப்பட வேண்டிய பணம் குறித்த தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டு, பணம் கடைக்காரரின் அக்கவுண்ட்டில் சேர்ந்து விடுகிறது.

இதற்கு மொபைல் வைத்திருப்பவர், முதலில் தன் பணத்தை, இதற்கான அக்கவுண்ட்டில் செலுத்தி வைத்திருக்க வேண்டும். பர்ஸில் பணம் போட்டு வைத்திருப்பதனைப் போன்றது.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது அனைத்து நாடுகளிலும், இந்தியா உட்பட, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Friday, January 20, 2012

சீனாவில் முதல் சூப்பர் கணணி அறிமுகம்.....

சீனாவில் முதல் சூப்பர் கணணியான சன்வே ப்ளூ லைட் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
சீனாவின் கணணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கணணி ஆயிரம் டிரில்லியன் கணக்குகளுக்கான தீர்வுகளை ஒரே நொடியில் கண்டறியும் வல்லமை கொண்டது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீன நாட்டின் கிழக்கு நகரமான ஜியானில் நிறுவப்பட்ட இந்த சூப்பர் கணணி, 3 மாத சோதனைக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் பயன்பாடு, உயிர் மருந்தகம், தொழில்துறை வடிவமைப்பு, நிதி ஆகிய துறைகளில் இந்த சூப்பர் கணணியை பயன்படுத்த முடியும்.

Thursday, January 19, 2012

பிரபல இணைய தளங்கள் அன்றும் இன்றும்........

இணைய உலகில் பிரபலமான இணையத் தளங்களாகத் திகழும் கூகுள், பேஸ்புக், அமேசன், யூடியூப், டிவிட்டர், மைஸ்பேஸ் ஆகியன ஆரம்ப காலங்களில் எவ்வாறு காட்சியளித்தன என உங்களுக்குத் தெரியுமா?
ஆம், அவற்றின் தற்போதைய தோற்றமானது ஆரம்ப காலங்களை விடப் பெரிதும் மாறியுள்ளன.

அவற்றின் ஆரம்ப கால 'Home Page' களை நீங்களும் ஒரு தடவை பாருங்களேன்.
அமேசன் ஆரம்பகாலத் தோற்றம்
அமேசன் தற்போதைய தோற்றம்
கூகுள் ஆரம்பகாலத் தோற்றம்
கூகுள் தற்போதைய தோற்றம்
பேஸ்புக் ஆரம்பகாலத் தோற்றம்

பேஸ்புக் தற்போதைய தோற்றம் 

மைஸ்பேஸ் ஆரம்பகாலத் தோற்றம்
மைஸ்பேஸ் தற்போதைய தோற்றம்
யூடியூப் ஆரம்பகாலத் தோற்றம்
யூடியூப் தற்போதைய தோற்றம்

இணையத் தொடர்பு இல்லாமல் போனில் இலவசமாக பேஸ்புக் பயன்படுத்துவது எப்படி?


போன் எதுனா இருக்கா உங்ககிட்ட? இனி அது போதும் முகப் புத்தகத்தில் முழுக. ஆம் இணையம் இன்றி பயன்படுத்தலாம் முகப்புத்தகத்தை. முழுக்க முழுக்க மிக எளிதான வழிதான் தேவை இதற்கு.அட வெறும் 1100 இருந்த போதுமுங்க. 



இது இந்தியாவுக்கு மட்டும் இப்போது. முதலில் உங்கள் அலைபேசியில் இருந்து *325# அல்லது (or *fbk#). இதற்கு உங்களிடம் இணையத் தொடர்பு தேவை இல்லை. கட்டணம் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டும். 

கீழே உள்ள படங்களை பாருங்கள் புரியும்.

        

Facebook India  ஆனது Fonetwish உடன் இணைந்து இந்த வசதியை இந்தியர்களுக்கு வழங்குகிறது. 

முதலில் உங்கள் User name, Password என்று வரிசையாக செல்ல வேண்டும். இந்த வசதி இப்போது ஏர்டெல், ஏர்செல்,ஐடியா, டோகோமோ நிறுவனப் பயனர்களுக்கு இது கிடைக்கும். 

இதற்கு ஒரு நாளுக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டுமே போதும் என்று சொல்லப்பட்டு உள்ளது. (தமிழன் இலவசமா எதிர் பார்ப்பான்னு தெரியல விடுங்க). இதன் மூலம் எளிதில் சாட் செய்யலாம், உங்கள் செய்திகளை பகிரலாம். 

இணையத் தொடர்பு இல்லாத நேரங்களில் இது பெறும் உதவி செய்யும். ஆபத்தான நேரங்களில் கூட இது உதவலாம். மிக அருமையான வசதி. பயன்படுத்தி பார்ப்போமே.